Monday 22 December 2014

ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை ?

ஒருமுறை வடநாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிஸிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிஸனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார்.
இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம் கேளுங்கோ” என்றார்.
அந்த வடநாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஓர் சந்தேகம் நெடுநாட்களாகவே இருந்து வந்தது.
இது குறித்துப்பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை.
அவர் அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார்.
“ஆஞ்சநேயர் பற்றி எனக்கோர் சந்தேகம் ....” இழுத்தார், அன்பர்.
“வாயு புத்திரனைப்பத்தியா ... கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி ... ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லோரும் அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித்தான் என் சந்தேகம் .....”
பெரியவா மெளனமாக இருக்கவே .... அன்பரே தொடர்ந்தார்.
“அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்யாசப்படுகிறது?”
பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார், வட நாட்டிலிருந்து வந்த அன்பர்.
தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.
கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல .... பெரியவா சொல்லப்போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர்.
ஒரு புன்முறுவலுக்குப்பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.
”பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா ....” என்று சந்திரனை அந்தக்குழந்தைக்கு வேடிக்கை காட்டி, உணவை வைப்பார்கள் பெண்கள்.
அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத்தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும்.
சாதாரண குழந்தைகளுக்கு ’நிலா’ விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு ’சூரியன்’ விளையாட்டுப்பொருள் ஆனது.
அதுவும் எப்படி? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.

அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தபோது, வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ’ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்துவிட்டது.
மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன்.
வாயுபுத்திரன் அல்லவா? அடுத்த கணமே அது தன் கையில் வந்துவிட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார்.
பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப்பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் அனுமன் சென்ற வேகத்தில், ராகு பகவானால் செல்ல முடியவில்லை.
சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேஸில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப்போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான்.
அதாவது தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப்பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வாங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும், நிவர்த்தி ஆகிவிடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.
இந்த உணவுப்பண்டம், எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார்.
அதாவது தன் உடல் போல் [பாம்பு போல்] வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார்.
அதைத்தான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.
ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகிவிடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன்.
வடையாகட்டும் .... ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான்.
தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளிநாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல்போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்கு சாத்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.
தவிர வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும் அவர்களுக்குக் காலை நேரத்திலேயே .... அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக் கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள்.
எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்குச் சாத்தி வழிபடுகிறார்கள்.
எது எப்படியோ அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக்கொண்டபடி, உளுந்து மாலைகள் அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன.
அது உப்பாக இருந்தால் என்ன ... சர்க்கரையாக இருந்தால் என்ன ... மாலை சார்த்தி வழிபடும் பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லிவிட்டு இடி இடியெனச் சிரித்தார், மஹா பெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக்கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம்.
சடாரென மஹானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார்.
கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.

Friday 5 December 2014

நிலக்கடலை

நிலக்கடலை

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது.
எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.
நீரழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.
மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பித்தப் பை கல்லைக் கரைக்கும்
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதயம் காக்கும்
நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல.
மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது.
இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
இளமையை பராமரிக்கும்
இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது.
இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
ஞாபக சக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது.
இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது.
ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது.
இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.
உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.
கொழுப்பை குறைக்கும்:
தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.
மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும்.
பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.
இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.
கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி
பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

Thursday 5 June 2014

சுயநினைவோடு இருக்கிறோம்.இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஒருவேளை நாம் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து போனால் இதே பக்தியோடு இறைவனை வணங்குவோமா?

சுயநினைவோடு இருக்கிறோம்.இறைவனை வழிபட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது.ஒருவேளை நாம் சுயநினைவை இழந்து புத்தி பேதலித்து போனால் இதே பக்தியோடு இறைவனை வணங்குவோமா?

அப்பைய தீட்சிதருக்கு இந்த கேள்வி மனதை குடைந்தது.இதற்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்றால் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தார்.சீடர்களை அழைத்தார்.அவர்களிடம் சில எழுதப்படாத ஓலைச் சுவடிகளை கொடுத்து விட்டு சொன்னார் "இப்போது இந்த ஊமத்தை விதைகளை நான் உண்ணப் போகிறேன்.இது என் இரத்தத்தில் கலந்து சித்தத்தை மயக்க போகிறது.புத்தி பேதலித்து எனக்கு சித்தபிரமை பிடித்த நேரத்தில் நான் என்ன உளறுகிறேன் என்பதை நீங்கள் இந்த ஓலைச் சுவடிகளில் எழுதி வையுங்கள்.நான் உளறி முடித்த பின் இந்த மாற்று மருந்தை கொடுத்து மயக்கத்தை தெளிய செய்யுங்கள்" என்றார்.

சீடர்களுக்கு வியப்பு மேலிட்டாலும் குருவின் உத்தரவை ஏற்றனர்.அப்பைய தீட்சிதர் மனமுருகி சிவபெருமான் திருவடிகளை சிந்தித்து வணங்கி கையில் இருந்த ஊமத்தை விதைகளை மென்று உட்கொண்டார்.

சிறிது நேரத்தில் அவரது செயல்பாடுகள் வித்தியாசத்தை காட்டின.பிறகு சீரான குரலில் ஓங்கி ஒலிக்க தொடங்கின ஐம்பது ஸ்தோத்திரங்கள்.அத்தனையும் வேதத்தின் சாரங்கள்.பாடல்களை சொல்லி முடித்து மயங்கியவருக்கு சீடர்கள் மாற்று மருந்தை கொடுத்தனர்.இன்றும் "ஆத்மார்ப்பண ஸ்துதி" என்ற பெயரில் அப்பாடல்கள் போற்றப்படுகின்றன.

"கஸ்தே போத்தும் ப்ரபவதி பரம் தேவதேவ ப்ரபாவம் யஸ்மாதித்தம் விவிதரசனா ஸ்ருஷ்டிரேஷா பபூவ | பக்திக்ராஹ்யஸ்த்வமஸி ததபி த்வாமஹம் பக்திமாத்ராத் ஸ்தோதும் வாஞ்சாம்யதிமஹதிதம் ஸாஹஸம் மே ஸஹஸ்வ".

கருத்துரை :-

இந்த விசித்திரமான பிரபஞ்சத்தைப் படைத்தவரும் தேவர்களுக்குள் முதல்வனுமான உன் அபாரமான மஹிமைகளை யாரால் தான் அறிய முடியும்? ஆயினும் பக்தர்களுக்கு அந்த ஈசுவரனும் சுலபர் ஆகிவிடுகிறபடியால் பக்தியையே முன்னிட்டு நான் உம்மை ஸ்துதி செய்யப் போகிறேன். என் துணிச்சலைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். வேதம் உன்னை எந்த விதத்திலாவது ஸ்துதி செய்யும் படி என்னைத் தூண்டுகிறது.

தமிழர் விஞ்ஞானம் அறிவோம்.

தமிழர் விஞ்ஞானம் அறிவோம்.

தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக

ட்ரோபோஸ்பியர் (troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்/ஓசோன் (stratosphere/ozone)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர் (thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness) - நீத்தம்

என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான் (1/17). ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி (4/5) இங்கு தான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.

"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20)
என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா - 30)
என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

"மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா - 365)
என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு

பாண்டிய மன்னனின் சந்தேகம் தீர்ந்தது எப்படி? ஏழை புலவன் தருமி மூலம் சிவபெருமான் கொடுத்தனுப்பிய ஓலையில் உள்ள பாடல் வாயிலாக, அந்த பாடல்,

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

பாடலின் பொருள்:-

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

இதற்கு விஞ்ஞான ஆதாரம்,

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.

உயிரெழுத்தான "அ" தொடங்கி ஃ வரையிலான பன்னிரண்டு எழுத்துக்களுக்கும், மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுக்கும் பாடியுள்ளார்.இது மிகவும் அற்புதமான பாடல்.நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

 இதில் உயிரெழுத்தான "அ" தொடங்கி ஃ வரையிலான பன்னிரண்டு எழுத்துக்களுக்கும், மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுக்கும் பாடியுள்ளார்.இது மிகவும் அற்புதமான பாடல்.நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.


-திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.


*****

தமிழில் "ங" என்ற எழுத்தின் இனத்தை சேர்ந்த பன்னிரண்டு எழுத்துக்களும் பலவாறாக பயன்படுத்த பட்டாலும் சொல்லின் முதலாக வருவதில்லை.

அப்படி சொல்லின் முதலாகவும் பாடலின் தொடக்கமாகவும் அமைந்த இரண்டே பாடல்கள்.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

-திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.

இதில் "ங" என்கிற எழுத்தின் வடிவம் நந்தியை போல காட்சியளிப்பதை காணலாம்.நந்தி கொடியை (ரிஷப கொடி) அப்பர் சுவாமிகள் இவ்வாறு உணர்த்துகிறார்.

மற்றொரு பாடல் ஔவையின் ஆத்திச்சூடி
"ஙப் போல்வளை"


****
இதில் மற்றுமொரு செய்தி.இந்த பாடல் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய சித்ததொகை என்னும் குறுந்தொகை பாடலில் வருகிறது.


*****
தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் 103 எழுத்துக்களில் தான் தமிழ் வார்த்தை ஆரம்பிக்க முடியும் என்பது நன்னூல் விதி.
******
  
வேதங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும்

மகா சங்கார காலத்தில் பிரளயம் தோன்றி இந்த உலகம் அழிவை சந்திக்கும் போது முதலில் கடலுக்கு அடியில் உள்ள "வடவாக்கினி" அல்லது "வடமுகாக்கினி" என்ற தீப்பிழம்பு தான் முதலில் உலகை அழிக்க காரணமாகிறது என வேதங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும் கூறுகின்றன.

இந்த வகை அக்கினி குதிரை முகத்துடன் கடலுக்கு அடியில் தலை குனிந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இது தலையை நிமிர்த்தும் போது அழிவு தொடங்கும் என இந்நூல்கள் கூறுகின்றன.

நவீன விஞ்ஞானம் கடலுக்கு அடியில் மிகப்பெரிய அக்கினி மலை இருப்பதாகவும், அதுவே அவ்வப்போது கடலுக்கு அடியில் எரிமலை சீற்றங்களாகவும் வெளிப்படுகின்றன என்பதை ஒத்துக் கொள்கிறது.இந்த எரிமலை சீற்றங்களின் தொடர் விளைவே சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை.

திருநாவுக்கரசு சுவாமிகளை இறைவன் சூலை நோய் தந்து ஆட்கொண்ட போது அந்த வலியின் கொடுமையை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான் அது வடவாக்கினியை போன்று இருந்ததாக குறிப்பிடுகிறார்.


------------------------------------------xxxxxxxxxxxxxxxxxx----------------------------------------------