Thursday 5 June 2014

உயிரெழுத்தான "அ" தொடங்கி ஃ வரையிலான பன்னிரண்டு எழுத்துக்களுக்கும், மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுக்கும் பாடியுள்ளார்.இது மிகவும் அற்புதமான பாடல்.நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

 இதில் உயிரெழுத்தான "அ" தொடங்கி ஃ வரையிலான பன்னிரண்டு எழுத்துக்களுக்கும், மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துக்களுக்கும் பாடியுள்ளார்.இது மிகவும் அற்புதமான பாடல்.நம் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடல்.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.


-திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.


*****

தமிழில் "ங" என்ற எழுத்தின் இனத்தை சேர்ந்த பன்னிரண்டு எழுத்துக்களும் பலவாறாக பயன்படுத்த பட்டாலும் சொல்லின் முதலாக வருவதில்லை.

அப்படி சொல்லின் முதலாகவும் பாடலின் தொடக்கமாகவும் அமைந்த இரண்டே பாடல்கள்.

ஙகரவெல்கொடியானொடு நன்னெஞ்சே
நுகர நீ உனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

-திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்.

இதில் "ங" என்கிற எழுத்தின் வடிவம் நந்தியை போல காட்சியளிப்பதை காணலாம்.நந்தி கொடியை (ரிஷப கொடி) அப்பர் சுவாமிகள் இவ்வாறு உணர்த்துகிறார்.

மற்றொரு பாடல் ஔவையின் ஆத்திச்சூடி
"ஙப் போல்வளை"


****
இதில் மற்றுமொரு செய்தி.இந்த பாடல் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய சித்ததொகை என்னும் குறுந்தொகை பாடலில் வருகிறது.


*****
தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் 103 எழுத்துக்களில் தான் தமிழ் வார்த்தை ஆரம்பிக்க முடியும் என்பது நன்னூல் விதி.
******
  

No comments:

Post a Comment