Thursday 5 June 2014

வேதங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும்

மகா சங்கார காலத்தில் பிரளயம் தோன்றி இந்த உலகம் அழிவை சந்திக்கும் போது முதலில் கடலுக்கு அடியில் உள்ள "வடவாக்கினி" அல்லது "வடமுகாக்கினி" என்ற தீப்பிழம்பு தான் முதலில் உலகை அழிக்க காரணமாகிறது என வேதங்களும், சைவ சித்தாந்த சாத்திரங்களும் கூறுகின்றன.

இந்த வகை அக்கினி குதிரை முகத்துடன் கடலுக்கு அடியில் தலை குனிந்த நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.இது தலையை நிமிர்த்தும் போது அழிவு தொடங்கும் என இந்நூல்கள் கூறுகின்றன.

நவீன விஞ்ஞானம் கடலுக்கு அடியில் மிகப்பெரிய அக்கினி மலை இருப்பதாகவும், அதுவே அவ்வப்போது கடலுக்கு அடியில் எரிமலை சீற்றங்களாகவும் வெளிப்படுகின்றன என்பதை ஒத்துக் கொள்கிறது.இந்த எரிமலை சீற்றங்களின் தொடர் விளைவே சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் என்பது விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை.

திருநாவுக்கரசு சுவாமிகளை இறைவன் சூலை நோய் தந்து ஆட்கொண்ட போது அந்த வலியின் கொடுமையை சொல்ல வந்த சேக்கிழார் பெருமான் அது வடவாக்கினியை போன்று இருந்ததாக குறிப்பிடுகிறார்.


------------------------------------------xxxxxxxxxxxxxxxxxx----------------------------------------------

 

No comments:

Post a Comment